தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வி குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்
செழியன், அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டது குறித்த கேள்வி
எழுப்பினார். அதற்கு பதில் அளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்,
சென்னையில் இருந்த பல்கலைக்கழகத்தை தவிற பிற இடங்களில் உள்ள
பல்கலைக்கழகங்கள் குறைந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன்
பின் தங்கிய நிலையில் இருந்ததாகவும், அவற்றின் தரத்தை உயர்த்தவே அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு உடனடியாக தேர்வுகள் நடத்தப்படுவது அவர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகளை நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் உயர்படிப்பிற்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது எனவும் உறுதி அளித்தார்.
பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
மேலும் மடிக்கணினிகள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, மடிக்கணினிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் தாமதப்படுத்தியதாலே அனைவருக்கும் ஒரே நேரத்தில் மடிக்கணினிகள் வழங்கமுடியவில்லை என முதலமைச்சர் அவர்கள் விளக்கமளித்தார்.
பின் தங்கிய நிலையில் இருந்ததாகவும், அவற்றின் தரத்தை உயர்த்தவே அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு உடனடியாக தேர்வுகள் நடத்தப்படுவது அவர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகளை நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் உயர்படிப்பிற்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது எனவும் உறுதி அளித்தார்.
பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
மேலும் மடிக்கணினிகள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, மடிக்கணினிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் தாமதப்படுத்தியதாலே அனைவருக்கும் ஒரே நேரத்தில் மடிக்கணினிகள் வழங்கமுடியவில்லை என முதலமைச்சர் அவர்கள் விளக்கமளித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...