"தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.
படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக மே இரண்டாவது வாரத்தில் விண்ணப்பம்
வினியோகிக்கப்படலாம்" என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில்
2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
15 சதவீதம் போக மாநில ஒதுக்கீட்டில் 2,172 இடங்கள் உள்ளன.
இவை, இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு
மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர, தமிழகத்தில் உள்ள 13 சுயநிதி மருத்துவக்
கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 950 அரசு ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ். இடங்களும்
கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,
படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் தான் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியாக
உள்ளது. இதையொட்டி, இந்த கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப வினியோகம் மே இரண்டாவது
வாரத்தில் துவங்கும் என, தெரிகிறது. "விண்ணப்பக் கட்டணம், வினியோக தேதி
உள்ளிட்ட முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என, மருத்துவக் கல்வி
இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...