கடந்த ஆண்டு 10ம்
வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம், ஆக.,13ல் கல்வி அமைச்சர்
முன்னிலையில் நடக்கிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர்
ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அமைச்சர்,
முதன்மை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் மண்டல அளவில் நடக்க உள்ளது.
இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி
பெற்ற அரசுப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுடன், முதன்மை கல்வி அலுவலர்கள்,
மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பங்கேற்க வேண்டும்.
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம்
அளிக்க வேண்டும். ஆக.,13ல்- வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர்
மாவட்டங்களுக்கு உட்பட்ட மண்டல அளவிலான கூட்டம் திருவள்ளூரில்
துவங்குகிறது.
ஆக., 20ல் மதுரை,
திண்டுக்கல், தேனி, சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களுக்கு
திண்டுக்கல்லிலும்; செப்.,1ல் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி,
கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தூத்துக்குடியிலும் ஆய்வு கூட்டம் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...