மத்திய
அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள்
என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை
என்று மத்திய பணியாளர் நலன்,
பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை
இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங்தெரிவித்தார். இது
தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை
தாக்கல் செய்த பதிலில் இதைத்
தெரிவித்துள்ளார்.
"மத்திய
அரசின் கீழ் பணியாற்றி வரும்
ஊழியர்களுக்கு தற்போது வாரத்தில் ஐந்து
வேலை நாள்கள் உள்ளன. அதை
வாரம் ஆறு நாள்களாக உயர்த்த
மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என
கேள்வி எழுந்துள்ளது. அதுபோன்ற கோரிக்கைகளையோ, யோசனையையோ மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.
அதே போல் ஈட்டிய விடுப்பு,
சாதாரண விடுப்பு ஆகியவற்றை உயர்த்தும் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை' என்று
அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...