சென்னைப்
பல்கலைக்கழகத்தின் 157-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு
பட்டங்களைப் பெறுவதற்கு ஆராய்ச்சிப் படிப்பை முடித்த மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னைப் பல்கலைக்கழகத்தின் 157-வது ஆண்டு விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
ஆராய்ச்சிப் படிப்பை
முடித்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டு முனைவர் (பி.ஹெச்.டி.)பட்டங்களை
பெறுவதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக விசாரணை மையத்தில் பெற்றுக்
கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ. 25 ஆகும். விண்ணப்பங்களை தபாலில் பெற விரும்புவோர் பதிவாளர், சென்னைப்
பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ. 25-க்கு
வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
வரைவோலையுடன் பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட உறையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 18 ஆகும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...