ஊரகப் பகுதிகளில் உள்ள,
அங்கன்வாடி மையங்களில், ஊட்டச்சத்து, முன்பருவ கல்வி, சுகாதார கல்வி, நோய்
தடுப்பு, உடல் நல பரிசோதனை, போன்றவை, பொது சுகாதார துறைகளுடன்
ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றன.
இப்பயிற்சிக்கு, மேலும் வலுவூட்ட, ஆறு மாதம் முதல், ஆறு ஆண்டு வரையுள்ள
குழந்தைகள், கருவுற்றிருக்கும் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், வளர்
இளம் பெண்கள் ஆகியோருக்கு, சுகாதாரமான சூழ்நிலையை அளிக்கும் வகையில், 3,000
அங்கன்வாடி மைய கட்டடங்கள் 195 கோடி ரூபாயில் கட்டப்படும் என, முதல்வர்
ஜெயலலிதா சட்டசபையில், 110வது விதியின் கீழ், கடந்த மாதம் 8ம் தேதி
அறிவித்தார்.
அதன்படி, ஒரு அங்கன்வாடி மையம் கட்ட, 6.50 லட்சம் ரூபாய் செலவாகும்.
கூலியாக 47 ஆயிரம் ரூபாய் செலவாகும். 3,000 அங்கன்வாடி மையங்கள் கட்ட 8.52
லட்சம், நபருக்குரிய சம்பளம் தேவைப்படும். எனவே, அங்கன்வாடி மையங்களை,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டலாம் என, ஊரக
வளர்ச்சி துறை கமிஷனர், அரசுக்கு பரிந்துரை செய்தார்.
அதை ஏற்று, அரசு மாவட்ட அளவில், பொருட்கள் வாங்க 60 சதவீதம்,
ஊதியத்திற்கு 40 சதவீதம் என்ற விகிதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதி திட்டத்தின் கீழ் 3,000 அங்கன்வாடி மையங்கள் கட்ட அனுமதி வழங்க,
அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...