10, 11 மற்றும்
12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் மாதம் நடைபெறும் காலாண்டு
தேர்வை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது
குறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் விருதுநகர்
மாவட்டத் தலைவர் வெ.வீரபாண்டியராஜ் ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விருதுநகர்
மாவட்டத்தில் காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து 26-ம்
தேதி வரை நடைபெறுகிறது. தற்போது செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில்
நடைபெறுவதாக இருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான
மொழித்தாள் தேர்வுகள், காலாண்டு விடுமுறைக்குப் பின் அக்டோபர் 7 மற்றும்
8-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள்
தொடர்ச்சியாக தேர்வுகள் எழுத முடியாமல், அவர்களுடைய கவனம் சிதறம். மேலும்
விடுமுறை நாட்களில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கான வாய்ப்புகள்
குறைந்துவிடும். மேலும் மொழித்தாளை அனைத்துப் பிரிவு மாணவர்களும் தேர்வு
எழுதுவதால், விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்களுக்கு சிரமமும், தாமதமும்
ஏற்படும். எனவே மொழித் தேர்வு விடுமுறைக்கு முன் செப்டம்பர் 20 மற்றும் 27
ஆகிய சனிக்கிழமைகளில் நடத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நலமாக
இருக்கும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இது விஷயத்தில் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று வீரபாண்டியராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...