இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை
செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து
மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்களை போலிஸார் தடுத்தனர்.
அனுமதி வாங்கிய பின்புதான் திருமதி
சபிதா அவர்களை சந்திக்க முடியும்
என்று காவல்துறை விளக்கமளித்தது.
ஆனால் போராட்டக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித
சங்கிலி போராட்டம் நடத்தினர்.இதனால் கோபமுற்ற காவல்துறை
சட்டத்தைக்காக்கும் பொருட்டு போராட்டக்கார்ர்கள்
மீது தடியடி நடத்தினர். இதில்
ஒரு பெண் உட்பட பலர்
காயமடைந்தனர் போராட்ட குழு தலைவர்
செல்லதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.அனைவரையும்
காவல் துறையினர் கைது செய்து தற்போது மதுரவாயல் அரசினர்
மேல்நிலைப்பள்ளியில் கைது செய்தவர்களை வைத்துள்ளனர்
.
இது குறித்து போராட்டகாரர்களில் ஒருவர் கூறியது நாங்கள் அமைதியாக போராடினோம் எங்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர் இதில் ஒரு பெண்னுக்கு பலமாக காயம் ஏற்பட்டுள்ளது அவர் சேப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனக்கு சட்டை கிழிந்துள்ளது கையில் அடிபட்டுள்ளது எங்கள் போராட்டத்தை திசை திருப்பிய சிலர் மீதும் எங்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் இன்று மாலை மாநகர காவல் துறை ஆனையாளரிடம் புகார் மனு கொடுக்க செல்ல உள்ளோம். என்று கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...