மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு
காலதாமதமாக வருதல், வீட்டுப் பாடத்தை எழுதிவராமல் இருத்தல், நன்றாக
படிக்காதது, வகுப்பில் பேசிக்கொண்டிருத்தல் என ஏதாவது தவறு இழைக்கும்
மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்தல், பிரம்பால் அடித்தல்
உள்ளிட்ட பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.
சுற்றறிக்கை: அண்மையில் "ஸ்கேல்' கொண்டு ஆசிரியர்
தாக்கியதில் மாணவர் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மாணவ-மாணவிகளை எந்தக் காரணம் கொண்டும்
மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து
கொள்ளக்கூடாது. அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும்
திட்டக்கூடாது. "ஸ்கேல்', கம்பு, கை உள்ளிட்ட எதைக் கொண்டும் அடிக்கக்
கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தது உறுதி செய்யப்பட்டால்,
ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...