தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டிகள் நடந்தன.தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சீர்மிகு
சட்டப்பள்ளியின் மாதிரி நீதிமன்ற குழுமம் மற்றும் தமிழ்நாடு மாசு
கட்டுப்பாடு வாரியம் சார்பில் 8வது தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி
நடந்தது. மாதிரி நீதிமன்ற போட்டியை உயர் நீதிமன்ற நீதிபதிகள்
ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டியில்,
இந்தியா முழுவதிலும் உள்ள சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரி
மாணவ, மாணவிகள் 37 குழுக்களாக கலந்து கொண்டனர். சாஸ்த்ரா பல்கலைக்கழக
சட்டக்கல்லூரி அணியினர் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை பெங்களூர் ராமையா
சட்டக்கல்லு�ரி மாணவ, மாணவியர்களும் தட்டிச்சென்றனர்.
உயர்
நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேஷ், புஷ்பா
சத்தியநாராயணா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். விழாவில், மாசு
கட்டுப்பாடு வாரிய தலைவர் ஸ்கந்தன், பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி,
சீர்மிகு சட்டப்பள்ளி இயக்குனர் (பொறுப்பு) நாராயணப்பெருமாள் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...