தொடக்கக்
கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன்
அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் . .தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான
ஆசிரியர் இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும்
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
காலிப்பணியிடங்களை
உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு
தீர்வு காண வலியுறுத்தி வந்தோம்.அந்தோ பரிதாபம் என்ற தலைப்பில் காலியாக
உள்ள உ.தொ.க.அ. காலிப் பணியிடங்களின்
பட்டியலை வெளியிட்டு வந்தோம்.
25-10-2014 அன்று
நடைபெற்ற உ.தொ.க.அ. பணிமாற்ற கலந்தாய்வில்
64 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உ.தொ.க.அலுவலர்களாக
பணி மாற்ற ஆணை வழங்கியுள்ளார்.
மேல்நிலைக்
கல்வித்தகுதிக்கு இணையாக diploma in teacher education
படித்தவர்களுக்கும் உ.தொ.க.அலுவலர் பணிமாற்ற ஆணை
வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஐபெட்டோ
அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை அவர்கள் தொடக்கக் கல்வி
இயக்குநருக்கு தொலைப்பேசியில் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டார்.
பலமுறை கேட்டுக் கொண்டதற்கிணங்க நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ், வரலாறு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை ஒரேநாளில் நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...