அமெரிக்காவில்
இந்திய மாணவர் ஒருவர் இளம்
விஞ்ஞானி விருதை வென்று சாதனை
படைத்து உள்ளார்.
இளம் விஞ்ஞானி விருது
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை
சார்ந்துள்ள நிலையில்,மின் பொருட்கள் உபயோகத்தால்
ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை கருத்தில்
கொண்டு மின் பாதுகாப்பு சாதனத்தை
சகீல் தோஷி என்ற அமெரிக்க
வாழ் இந்திய மாணவர் கண்டுபிடித்து
சாதனை படைத்து இருக்கிறார்.
அமெரிக்காவின்
பித்ஸ்பர்க் பகுதியில் தங்கி இருக்கும் அவர்,
இந்த சாதனைக்காக ‘அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி’
என்ற புத்தாக்க விருதையும் 25 ஆயிரம் அமெரிக்க டாலரையும்
வென்று உள்ளார். இந்த விருதுக்கான இறுதிச்சுற்றில்
மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். இறுதியில்,
சகீல் தோசிக்கு இந்த விருது வழங்குவதாக
அறிவிக்கப்பட்டது.
வாழ்த்து
இது தொடர்பாக விருதினை வழங்கும் டிஸ்கவரி எஜூகேஷன் அமைப்பின் தலைவர் பில் குட்வின்
கூறுகையில், ‘‘இளம் விஞ்ஞானி விருதை
வென்றுள்ள சகீல் தோசி மற்றும்
அவருடன் சேர்ந்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற நபர்களை
அவர்களது அர்ப்பணிப்பு, புத்தாக்க முயற்சிக்காக வாழ்த்துகிறோம். வரும் நாட்களில், இந்த
சமுதாயத்தில் அவர்கள் பல அர்த்தமுள்ள
தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்’’
என்றார்.
மேலும்,
அமெரிக்காவின் வெர்ஜீனியா பகுதியை சேர்ந்த இந்திய
மாணவர் ஜெய் குமார் என்பவர்,
காற்று தூய்மைக்கேட்டை தடுப்பதற்காக ஜன்னலில் பொருத்தப்படும் சிறப்பு கருவியை கண்டறிந்தார்.
இந்த போட்டியில் அவர் 3–வது இடத்தை
பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...