வேலைவாய்ப்பு
அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள 652 கணினிப்
பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என ஆசிரியர்
தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:652 கணினிப்
பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான தெரிவுப் பணிகள் வேலைவாய்ப்பு அலுவலகப்
பதிவு மூப்பின் அடிப்படையில் நடைபெற உள்ளதால், அந்த அலுவலகத்தால்
பரிந்துரை செய்யப்படும் பணிநாடுநர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவர்.
ஆசிரியர் தேர்வு
வாரியம் இது தொடர்பாக எந்தவித விண்ணப்பங்களையும் கோராத நிலையில், இது
சார்ந்த விண்ணப்பங்களை நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப
வேண்டாம் என பணிநாடுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...