அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட
1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில்
நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு
முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசுமுடிவுசெய்துள்ளது.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை,
உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள்முன்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலமாக நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில், சிறப்பாசிரியர்களை இனிமேல் போட்டித்தேர்வு மூலம்
தேர்வு செய்ய அரசு முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பான
அரசாணை கடந்த 17.11.2014 அன்று வெளியானது.அதன்படி,
95 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய
5மதிப்பெண்ணுக்கு புதிய முறை கடைப்பிடிக்கப்படும்.
அதாவது, கூடுதல் கல்வித்தகுதிக்கு அரை
மதிப்பெண், அரசு பள்ளிகளில் பணியாற்றிய
அனு பவம் இருப்பின் அதற்கு
1 மதிப் பெண், தனியார் பள்ளி
அனுபவம் என்றால் அரை மதிப்பெண்,
என்சிசி, என்எஸ்எஸ், நுண்கலை (பைன் ஆர்ட்ஸ்) சாதனை
போன்ற இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை
மதிப்பெண், நேர்காணலுக்கு ஒன்றரை மதிப்பெண் என
மொத்தம் 5 மதிப்பெண் வழங்கப்படும்.
1,000 காலியிடங்கள்
புதிய தேர்வுமுறையில் 530 உடற்கல்வி ஆசிரியர், 250 ஓவிய ஆசிரியர், 160 தையல்
ஆசிரியர், 55 இசை ஆசிரியர் என
ஏறத்தாழ 1000 சிறப்பாசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை
முடிவுசெய்தது.இந்த நிலையில், எழுத்துத்
தேர்வு நீங்கலான எஞ்சிய 5 மதிப்பெண்ணில் அரை மதிப்பெண் வழங்க
வேண்டியுள்ளதால் அதனால் நடைமுறை சிக்கல்
ஏற்படக்கூடும் என்றும், ஆயிரக்கணக்கானோர் சிறப்பு ஆசிரியர் பயிற்சியை
முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக காத்திருப்பதால்
பதிவுமூப்புக்கும் (சீனியாரிட்டி) குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கலாம் என்று அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
புதிய தேர்வுமுறையிலும் மாற்றம்
இதைத்தொடர்ந்து,
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வர
அரசு முடிவுசெய்துள்ளது. அரை மதிப்பெண் வழங்கும்
முறையைகைவிட்டுவிட்டு, எளிதாக கணக்கிடும் வண்ணம்
முழு எண்ணில் மதிப்பெண் வழங்கவும்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வேலைவாய்ப்பு அலுவலக
பதிவுமூப்புக்கு பதிவு செய்த வருடத்துக்கு
ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கலாமா? என்பது குறித்தும் அரசு
திட்டமிட்டு வருவதாக ஆசிரியர் தேர்வுவாரிய
அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...