முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10
ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும்
அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.தேர்வுக்கான சரியான விடையை ஆசிரியர் தேர்வு
வாரியம் 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது.
இந்நிலையில் விடைகள் பற்றிய ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் வருகிற 29ந்
தேக்குள் அதற்கான ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி
வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஆட்சேபணை விண்ணப்பங்களையும் இறுதி நாளன்று பெற்ற பிறகு டிஆர்பி
அவர்றை பரிசீலனை செய்யும்.அதன்பிறகு இறுதிவிடைகள் இணையதளத்தில்
வெளியிடப்படும். விடைத்தாட்களை சரி செய்வதில் ஏற்படும் பிழைகளைத் தடுக்க
ஒவ்வொரு விடைத்தாளும் 2 முறை ஸ்கேன் செய்யப்படும் என்றும் அதன் பிறகு
தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றும் டிஆர்பி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...