ஆபத்து கால சேவை குறித்த முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசித் தேதியாகும்.
108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ
நிறுவனத்தின் சார்பில் ஆபத்து கால சேவை குறித்த இரண்டு ஆண்டு கால முதுநிலை
பட்டயப்படிப்பு ஹைதராபாதில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்புக்கு 2015-ஆம் ஆண்டுக்கான மாணவர்
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். தாவரவியல், உயிரி வேதியியல்,
நுண்ணுயிரியல், உயிரிதொழில்நுட்பம், செவிலியப் படிப்பு, இயன்முறை
மருத்துவம், அறிவியல் தொடர்பான படிப்புகள், இந்திய முறை மருத்துவமான
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம், ஹோமியோபதி
உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை www.emri.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15-ஆம்
தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 21-ஆம் தேதி நுழைவுத் தேர்வு
நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல், உடல் தகுதித் தேர்வு
ஆகியவை நடைபெறும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...