அரசு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித்
தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம்
தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அரசுத் தேர்வுகள்
இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்
செய்யலாம்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை
மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு
செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 6-ஆகும். இந்தப் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ்,
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர் கல்வித்
தகுதிச் சான்றிதழ், பணி முன் அனுபவச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் அசல்,
நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தப் பணி நியமனம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும்
நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றிபெறுபவர்களில் இருந்து 1:5 என்ற
விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மாவட்ட முதன்மைக்
கல்வி அதிகாரி உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பர்.
நேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமனம் வழங்கப்படும்.
சென்னையில் எங்கே பதிவு செய்யலாம்? சென்னை (தெற்கு
கல்வி மாவட்டம்)- அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. தபால் நிலையம்
அருகில், அரும்பாக்கம். ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி,
விருகம்பாக்கம் (சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில்).
சென்னை (மத்திய கல்வி மாவட்டம்) -
சாந்தோம் மேல்நிலைப் பள்ளி, சாந்தோம். ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளி,
4-ஆவது பிரதான சாலை, காந்தி நகர், அடையாறு (மலர் மருத்துவமனை அருகில்).
சென்னை (கிழக்கு கல்வி மாவட்டம்) -
கே.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி, வண்ணாரப்பேட்டை (ரெய்னி
மருத்துவமனை அருகில்). கேஆர்சி ஏஆர்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம்
(ராயபுரம் பாலம் அருகில்).
சென்னை (வடக்கு கல்வி மாவட்டம்) - ஈஎல்எம் ஃபேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம். பெனடிக் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி (வேப்பேரி காவல் நிலையம் அருகில்).
நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரம்
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு
வழங்கப்படும் மதிப்பெண் விவரங்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 முதல் 2
ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 2 மதிப்பெண், 2 முதல் 4 ஆண்டுகள் வரை
காத்திருப்போருக்கு 4 மதிப்பெண், 4 முதல் 6 ஆண்டுகள் வரை
காத்திருப்போருக்கு 6 மதிப்பெண், 6 முதல் 8 ஆண்டுகள் வரை
காத்திருப்போருக்கு 8 மதிப்பெண், 10 ஆண்டுகள், அதற்கு மேல்
காத்திருப்போருக்கு 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண்,
இளங்கலைப் பட்டப் படிப்பு, அதற்கு மேல் படித்திருந்தால் 3 மதிப்பெண்
வழங்கப்பட வேண்டும். தனியார், அரசுப் பள்ளி அல்லது கல்லூரிகளில் ஆய்வக
உதவியாளராக பணிபுரிந்ததற்கான சான்று இருந்தால் அதற்கு 2 மதிப்பெண்கள்.
மேலும், நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 8 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...