தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 23 April 2015

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் 6 சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
ரூ.366 முதல் ரூ.4,620 வரை
இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366 முதல் ரூ 4 ஆயிரத்து 620 வரையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
18 லட்சம் அலுவலர்கள்
இந்த அகவிலைப்படி கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர்.
அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ.1,222 கோடியே 76 லட்சம் செலவாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அரசுக்கு நன்றி
அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு என்.ஜி.ஓ. சங்க தலைவர் சண்முகராஜன், என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி, தமிழ்நாடு தலைமை செயலக சங்கத் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்- உடற்கல்வி இயக்குநர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.சங்கரப்பெருமாள், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் ஆகியோர் அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

மத்திய அரசு கடந்த 7-ந்தேதி 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 55 லட்சம் ஓய்வூதியர்களுக்கும் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இந்த அகவிலைப்படி கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது மாநில அரசும் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது
.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H