இந்தியாவில் உள்ள 7 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து
செய்வது தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால் மற்றும் பிரபுல்ல
சி.பந்த் ஆகியோர் முன்னிலையான அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது,
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் வழங்கும் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கலாம் என்றும் மற்ற
பல்கலைக்கழகங்கள் அங்கீகாரத்துக்காக மனு தாக்கல் செய்திருந்தால் அதன்மீது
இரு வாரங்களுக்குள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவெடுக்க வேண்டும்
என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிகர்நிலை பல்கலைக்கழகங்களை
நெறிப்படுத்துவது குறித்த வழிகாட்டுமுறைகளை மத்திய அரசு அக்டோபர் 18–ந்
தேதிக்குள் முடிவு செய்யவேண்டும். அன்றைய தேதிக்கு (ஆகஸ்டு 18) வழக்கு
ஒத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...