வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஒரே விண்ணப்பம் தேர்தல் ஆணையம் திட்டம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 24 April 2015

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஒரே விண்ணப்பம் தேர்தல் ஆணையம் திட்டம்:

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஒரே விண்ணப்பம் வழங்கும் எளிய நடை முறை கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:-
வாக்காளர் அட்டையில் ஆதார் எண்
வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் படி உள்ள 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்களிடம் தகவல் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. கடந்த 22-ந்தேதி நிலவரப்படி 3 கோடி வாக்காளர்களிடம் அவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
இதில் 1 கோடியே 82 லட்சம் வாக்காளர்களுக்கான தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு விட்டது. அதன்படி 55 சதவீதம் வாக்காளர்களிடம் தகவல்கள் பெறப்பட்டு உள்ளன. 33 சதவீதம் வாக்காளர்களின் தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் தினசரி 10 முதல் 15 லட்சம் வாக்காளர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
முன்னோடி மாவட்டங்கள்
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் 70 சதவீத வாக்காளர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டங்கள் முன்னோடி மாவட்டங்களாக திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளில் அதிகளவு விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் 38 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்களில் 10 லட்சம் வாக்காளர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் செல்போன் குறுஞ்செய்தி, தொலைபேசி மற்றும் இணையதளம் மூலம் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் தகவல்களை அளித்துள்ளனர். இதுதவிர 5 லட்சத்து 72 ஆயிரம் விண்ணப்பங்கள் புகைப்பட மாற்றம், எழுத்து பிழை, இடமாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்டவற்றை மாற்றி தர கோரிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அவர்களுக்கு இலவசமாக வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். மாறாக வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் மற்றும் மாற்றி தர கோருபவர்கள் ரூ.25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகம் முன்னிலை
அகில இந்திய அளவில் வாக்காளர்கள் தகவல்களை அளிப்பதில் தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது. இந்தப்பணியை மேலும் துரிதப்படுத்துவதற்காக தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளில் வரும் 26-ந்தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக நாளை (இன்று) 32 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கடந்த மாதம் 8-ந்தேதி நிலவரப்படி 18 வயது நிரம்பியவர்களில் 4 கோடியே 18 லட்சத்து 65 ஆயிரத்து 832 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இது 81.4 சதவீதமாகும். ஆதார் அட்டை பெறதாத 20 சதவீதம் பேருக்கும் ஆதார் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தானியங்கியில் விவரம் சேகரிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்தம் செய்ய 6, 7 மற்றும் 8 ஏ என்ற 3 வகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு குழறுபடியை சந்திக்கின்றனர். இதனை போக்க விரைவில் ஒரே விண்ணப்பம் மட்டும் வழங்கப்பட்டு அந்த படிவத்திலேயே பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு எளிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதேபோல் தானியங்கி முறையில் தொலைபேசி மூலமாக வாய்ஸ் மூலமாக தானாகவே வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. குடும்பங்களில் விடுபட்டவர்களை கண்டுபிடித்து சேர்ப்பதற்காக 1997-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களின் தகவல்கள் பெறப்பட்டு உள்ளன.
அரசியல் கட்சிகள்
இந்த முறை செயல்படுத்தும் பட்சத்தில் நூறு சதவீதம் வாக்காளர்களின் முழுவிவரங்களும் சேகரிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் குறைகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் சுட்டி காண்பிக்கின்றன.
அதனை வரவேற்கிறோம். அதேநேரம் தற்போது வாக்காளர் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் இப்போதே சுட்டி காட்டலாம். இதன் மூலம் தேர்தல் நேரங்களில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H