10½ லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவை நேற்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
குரூப்-4 தேர்வு
தமிழக அரசு துறைகளில் 4 ஆயிரத்து 963 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பும் பணியை தமிழக அரசு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து இருந்தது. இதில் இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 2 ஆயிரத்து 949 பணியிடங்களும், தட்டச்சர் பணிக்கு 1683 பணியிடங்களும், சுருக்கெழுத்தாளர் பணிகளுக்கு 331 பணியிடங்களும் ஆகும்..
இதையொட்டி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி 10-வது வகுப்பு
தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மேலும் குரூப்-4
எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றாலே போதும். நேர்முகத்தேர்வு இல்லாமல் கல்வி
மற்றும் தொழில்நுட்ப சான்றிதழ் சரிபார்த்தல் முடிந்த உடன் வேலை கிடைத்து
விடும் என்பதால் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து
இருந்தனர். குரூப்-4 தேர்வு
தமிழக அரசு துறைகளில் 4 ஆயிரத்து 963 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பும் பணியை தமிழக அரசு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து இருந்தது. இதில் இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 2 ஆயிரத்து 949 பணியிடங்களும், தட்டச்சர் பணிக்கு 1683 பணியிடங்களும், சுருக்கெழுத்தாளர் பணிகளுக்கு 331 பணியிடங்களும் ஆகும்..
10½ லட்சம் பேர் எழுதினார்கள்
இதற்கான தேர்வு 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 448 மையங்களில் நடந்தது. தகுதியான விண்ணப்பங்களாக 12 லட்சத்து 72 ஆயிரத்து 293 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 2 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வை 10 லட்சத்து 61 ஆயிரத்து 45 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை எழுத எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் பட்டதாரிகள்தான் ஏராளமானவர்கள் எழுதினார்கள். தேர்வை எழுதி 5 மாதங்கள் ஆகிவிட்டது. அதன் காரணமாக எப்போது முடிவு வரும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்திருந்தனர்.
முடிவு வெளியீடு
இந்த நிலையில் 10½ லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. முடிவை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ( ஷ்ஷ்ஷ்.௴ஸீஜீ௳நீ.ரீஷீஸ்.வீஸீ ) பார்க்கலாம். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது;-
குரூப்-1 தேர்வு, நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வு, நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்-2 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. எவ்வளவு விரைவாக தேர்வு முடிவை வெளியிட முடியுமோ அந்த அளவுக்கு விரைவாகவும், அதே நேரத்தில் சரியாகவும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அடுத்த கட்டமாகவும் சில தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். புதிய அறிவிப்பும் வெளியிடப்படும்.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
குரூப்-1 தேர்வு விரைவில் அறிவிப்பு
75 பணியிடங்கள் கொண்ட புதிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...