தஞ்சை அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தமிழில் 100/99 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 100/100 மதிப்பெண்களும் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்.
ஈரோடு மாவட்டம் முதலிடம்10ம் வகுப்பு பொதுத்தேர்வில்
ஈரோடு மாவட்டம் 98.04 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
97.98 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் இரண்டாமிடமும்,
97.62 சதவீத தேர்ச்சி பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
இன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர் மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.இன்றைய தேர்வு முடிவுகளை வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது:
இந்த தேர்தவில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகம். இந்த ஆண்டு முடிந்த தேர்தலில், 92. 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95. 4 சதவீதம் மாணவிகளும், 90.4 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறை மாணவ, மாணவிகள் அரும் பெறும் சாதனை படைத்துள்ளனர். இதனால் அனைத்து முதல் ரேங்கு மாணவர், மாணவிகளின் பெயரை அறிவிக்காமல் ( நேரம் கருதி நான் அரசு பள்ளியில் படித்து முதலிடம் பெற்ற 3 மாணவர்களை மட்டும் அறிவிக்கிறனே் என்றார்.
இன்றைய முடிவில் 499 மார்க்குகள் பெற்று 41 பேர் முதலிடமும், 192 மாணவ, மாணவிகள் இரண்டாமிடமும், 540 பேர் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்,
ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 853 பேர் அறிவியலில் 100க்கு 100 பெற்றுள்ளனர். கணிதத்தில் 27 ஆயிரத்து 134 பேர் கணிதத்தில் 100க்கு 100 ம், சமூக அறிவியலில் 51 ஆயிரத்து 629 பேர் 100க்கு 100ம், மார்க்குகள் எடுத்துள்ளனர். பிற மொழிப்பாடங்களில் 500 க்கு 500 மார்க்குகள் பெற்று 5 மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.
முதலிடம் என்பது ஒருவர் அல்லது இருவர் என பிடித்து வந்த காலம் மாறி பலர் இந்த இடத்தை பிடிக்கும் சூழலை மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...