எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 1164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று
சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டைவிட 606 அரசு பள்ளிகள் கூடுதலாக 100 சதவீத
தேர்ச்சி பெற்றுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா
உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கூடுதல் தேர்ச்சி
தமிழக அரசு தனது பல்வேறு சிறப்புத் திட்டங்களின் மூலம் அரசு
பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவித்து கல்வி அளித்ததன் விளைவாகவும்,
ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளாலும், இந்த ஆண்டு
அரசுப்பள்ளிகள் 89.2 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன. அதேபோல்
இக்கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை விட மாணவிகள் 6.9
சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளன.
அதிகரிப்பு
100 சதவிதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 606 பள்ளிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
தற்போது
வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஈரோடு மாவட்டம் 98.04
சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதனைத்
தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் 97.98 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம்
இடத்தையும், திருச்சிமாவட்டம் 97.62 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம்
இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 2012–ம் ஆண்டு, 358 அரசு பள்ளிகள் 100
சதவீதம் தேர்ச்சி பெற்றன. தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கியுள்ள பல்வேறு
நலத்திட்டங்களின் மூலம் இச்சாதனை படிப்படியாக 2013 ஆம் ஆண்டில் 453
பள்ளிகளாகவும், 2014 –ம் ஆண்டில் 558 பள்ளிகளாகவும் அதிகரித்தன. இக்கல்வி
ஆண்டில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்புப்
பயிற்சி அளித்ததன் மூலமாக 1164 அரசு பள்ளிகள் 100 சதவித தேர்ச்சியை
பெற்றுச் சாதனைப் படைத்துள்ளன.
இக்கல்வியாண்டில் அரசு பள்ளிகளில்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 2,539 மாணவர்கள் கணிதப்
பாடத்தில் 100 சதவிகித தேர்ச்சியும், 27,157 மாணவர்கள் அறிவியல் பாடத்தில்
100 சதவிகித தேர்ச்சியும், 10,408 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் 100
சதவிகித தேர்ச்சியும் பெற்றிருப்பது
முதல் 3 இடம்
அரசு பள்ளிகளில் பயின்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்த மாணவ –மாணவிகளின் விவரம் வருமாறு :–
499 மதிப்பெண் பெற்று 3 மாணவிகள் முதல் இடம் பெற்றனர்.
1.இ.ஜெயநந்தனா, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வாழப்பாடி, சேலம் மாவட்டம் அவர் எடுத்த மதிப்பெண்
1.எஸ். பாரதிராஜா, அரசு உயர்நிலைப்பள்ளி, பாரனம் அரியலூர் மாவட்டம்.
1.ஆர். வைஷ்ணவி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்
498 மதிப்பெண் பெற்று 2–வது இடம் பெற்ற 6 பேர்
2.டி, மானஷா, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மேலூர், மதுரை மாவட்டம்
2.எஸ். சுவாதி, அரசு உயர்நிலைப்பள்ளி, பிச்சாம் பாளையம் புதூர், திருப்பூர் மாவட்டம்
2.டி. அஸ்விதா காமாட்சி, அரசு மேல் நிலைப்பள்ளி, சேரிப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்
2.எ. நருமுகை, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பெத்தநாயக்கன் பாளையம், சேலம் மாவட்டம்
2.எம்.ஹேமபிரியா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி, சேலம் மாவட்டம்
2.எ. சாபா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டம்.
3–வது இடத்தை 497 மார்க் எடுத்து 10 பேர் பிடித்தவர்கள்
3.ஜி. பிரித்தி லாவன்யா, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, மஞ்சூர் நீலகிரி மாவட்டம்
3ஆர்.அஞ்சனாபாரதி, அரசு மேல்நிலைப் பள்ளி, சேரிப்பாளையம் கோவை மாவட்டம்
3.கே.வான்மதி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் சேலம் மாவட்டம்
3.கே.வர்ஷினிதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம் மாவட்டம்
3.எஸ்.தமிழரசு, அரசு மேல்நிலைப் பள்ளி, பாச்சால், நாமக்கல் மாவட்டம்
3ஆர்.தினேஷ்ராஜா, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்.
3 எல்.பாலாஜி, அரசு மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணாபுரம், தர்மபுரி மாவட்டம்
3.எம்.மகேஸ்வரி, அரசு மேல்நிலைப் பள்ளி, தாமரன்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்
3.எஸ்.பிரியதர்ஷினி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சோளிங்கர், வேலூர் மாவட்டம்
3.பி.ஜீவிதா, அரசு மேல்நிலைப் பள்ளி, அனாபுத்தூர், காஞ்சீபுரம் மாவட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்
1ஆதிதிராவிட நலப் பள்ளிகள்87.51
2மாநகராட்சிப் பள்ளிகள்92.1
3வனத்துறைப் பள்ளிகள்92.18
4அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.42
5அரசுப் பள்ளிகள்89.2
6அறநிலையத் துறைப் பள்ளிகள் 91.15
7கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்88.75
8நகராட்சிப் பள்ளிகள்89.22
9சமூக நலத்துறைப் பள்ளிகள்90.16
10பழங்குடியினர் நலப் பள்ளிகள்86.08
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...