ஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில்
சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதன்மைத் தேர்வு
ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற உள்ளது.இந்தத் தேர்வில், ஜே.இ.இ. பிரதான தேர்வு தகுதிப் பட்டியலில் முதல் 1.50 லட்சம் இடம் வரை பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்.
என்ஐடி, ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. முதலில் பிரதான (மெயின்) தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு நடத்தப்படும்.
2015-ஆம் ஆண்டுக்கான பிரதான தேர்வு ஏப்ரல் முதல்
வாரத்தில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 10.25
லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் 27-ஆம் தேதி
வெளியிடப்பட்டன. இதில், இயற்பியல் பாடக் கேள்விகள் கடினமாக இருந்ததால்,
நிகழாண்டு பொதுப் பிரிவு கட்-ஆஃப் 105-ஆகக் குறைந்தது.என்ஐடி, ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. முதலில் பிரதான (மெயின்) தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு நடத்தப்படும்.
தமிழகத்திலிருந்து பிரதான தேர்வுக்குப் பதிவு செய்த 1.73 லட்சம் பேரில் 11,500 பேர் குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர். இதன் மூலம், இவர்கள் முதன்மைத் தேர்வை எழுதும் தகுதியையும் பெற்றனர். முதன்மைத் தேர்வானது மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து பொதுப் பிரிவைச் சேர்ந்த 75,750 பேர், ஓபிசி பிரிவைச் சேர்ந்த 40,500 பேர், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த 22,500 பேர், எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 11,250 என மொத்தம் 1.50 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...