பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 7 நாள்களே
உள்ள நிலையில், வியாழக்கிழமை மாலை வரை 20 ஆயிரம் பேர் மட்டுமே பூர்த்தி
செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.முதல் தலைமுறை மாணவர்
சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாகவே, விண்ணப்பங்கள் குறைந்த
அளவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது. பிற மையங்களில் மே 27-ஆம் தேதி வரையிலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
அதன்படி, விண்ணப்ப விநியோகம் இன்னும் 7 நாள்களே நடைபெற உள்ள நிலையில் வியாழக்கிழமை மாலை வரை 1 லட்சத்து 81 ஆயிரத்து 315 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இதுபோல் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறியது:
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது மிகக் குறைவாகத்தான் உள்ளது. முதல் தலைமுறை மாணவருக்கான சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதாலேயே, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது தாமதப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இருந்தபோதும், தபால் நிலையங்களில் குறிப்பிட்ட அளவில் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்திருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. அடுத்த இரு தினங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரத் தொடங்கிவிடும் என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...