அகில இந்திய அளவில் நடந்த மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வில் முறைகேடு
நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நேற்று மீண்டும் சுப்ரீம்
கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையான அமர்வு
முன்பு நடைபெற்றது. அப்போது சில மாணவர்களின் பெற்றோர்களும், நேர்மையாக
தேர்வு எழுதிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மறுதேர்வு நடத்த
உத்தரவிட வேண்டும் என்றனர்.
நீதிபதிகள் கூறும்போது, ‘‘முறைகேட்டில்
ஈடுபட்ட மாணவர்களின் பெயர்களை ஒதுக்கிவிட்டு தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.
விடைத்தாள்கள் கசிந்ததாக கூறப்படும் இதர மாநிலங்களும் அரியானா மாநில
போலீசின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். முறைகேட்டில் பயன்படுத்திய
செல்போன்களின் சேவையை வழங்கும் நிறுவனங்கள் 70 செல்போன்களில் பேசப்பட்ட
தகவல்களை போலீசாருக்கு வழங்க வேண்டும். உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும்
என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. போலீசாரின் இறுதி விசாரணை
அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். மறுதேர்வு முடிவு இறுதி
வாய்ப்பாக மட்டுமே இருக்கும். போலீசார் அறிக்கையை மே 26–ந் தேதி தாக்கல்
செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...