கல்வி பெறும் உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் நடந்த மாணவர் சேர்க்கை
குறித்து விரிவான தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி பெறும் உரிமை சட்டம்
கல்வி பெறுவதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் கல்வி பெறும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள் அப்பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலுள்ள நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த சட்டம் இன்று வரை முழுமையாக
நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக பணக்கார மாணவர்களைக் கொண்டு இந்த இடங்களை
நிரப்பும் தனியார் பள்ளிகள், அவ்வாறு சேர்க்கப்பட்ட அனைவரும் நலிவடைந்த
பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று ஆவணங்களில் பதிவு செய்துவிடுகின்றன. ஆனால்,
தமிழக அரசு இன்று வரை, தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ,
சேர்க்கையை முறைப்படுத்தவோ முன்வரவில்லை.இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி பெறும் உரிமை சட்டம்
கல்வி பெறுவதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் கல்வி பெறும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள் அப்பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலுள்ள நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் சுமார் ரூ.150 கோடியை தமிழக அரசு வழங்கவில்லை என்றும், இதனால் நடப்பாண்டில் கல்வி பெறும் உரிமை சட்டத்தில் மாணவர்களைச் சேர்க்கப்போவதில்லை என்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசுக்கு மிரட்டல் விடுத்தன.
பிரதமருக்கு கடிதம்
இதையடுத்து கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்த்ததற்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.97.04 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்யும்படி பிரதமருக்கு தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதினார்.
ஆனால், அக்கடிதத்தை மத்திய அரசு பொருட்படுத்தாத நிலையில், தமிழக அரசே அதன் சொந்த நிதியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு ரூ.97.05 கோடியை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
விரிவான தணிக்கை
கல்வி பெறும் உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் நடந்ததாக கூறப்படும் மாணவர் சேர்க்கை குறித்து நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அடங்கியக் குழுவைக் கொண்டு விரிவானத் தணிக்கை நடத்தப்பட வேண்டும்.
அதன்பிறகே, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...