அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களின் யோகா பயிற்சி மதிப்பெண்ணும்
கணக்கிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி
ஆசிரியர்கள் உட்பட தகுதியான ஆசிரியர்கள், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
கடந்த, 2014 - 15க்கான நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்ய
அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும்,
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும்,
தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம் என, இடைநிலை கல்வி இணை இயக்குனர் கார்மேகம்
அறிவித்துள்ளார். நல்லாசிரியராக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:
* 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.
* கடந்த ஆண்டு செப்டம்பர், 30ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்றவராக இருக்கக்கூடாது.
* பள்ளிக்கு காலந் தவறாமல் வந்திருக்க வேண்டும்.
* தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் தன் வகுப்பு அல்லது பாடத்தில், 'சென்டம்' அல்லது அதிக தேர்ச்சி அளித்திருக்க வேண்டும்.
* தலைமை ஆசிரியராக இருந்தால், தன் பதவிக்காலத்தில் தேர்ச்சி அதிகரித்திருக்க வேண்டும்.
* என்.சி.சி.,யான
தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ்., என்ற நாட்டு நலப்பணித்திட்டம், 'சாரண,
சாரணியர் இயக்கம் போன்றவற்றிலும், யோகா பயிற்சி அளிப்பதிலும்
பங்கெடுத்திருந்தால், அதற்கு தனி மதிப்பெண் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...