சென்னையில் வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை மாணவர்களும், தன்னார்வ
அமைப்பும் இணைந்து சீரமைத்து வருகின்றன.தமிழகத்தில் வெள்ள
பாதிப்புக்குள்ளான கல்வி நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் அமைப்பு
(டிஎன்எஃப்எஸ்), சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் பல்வேறு
சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த
அமைப்புடன், ஒசூர் டி.வி.எஸ். அகாதெமி பள்ளி மாணவர்கள் இணைந்து,
பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சீரமைப்புப் பணிகளை கடந்த
வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக அந்தப் பள்ளியில்
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 500 மாணவர்களும்
தங்களின் கைச்செலவுக்கான பணத்துடன், ஒரு மாதம் இயன்ற வேலைகளை செய்து
கொடுத்ததுடன், தாங்களே வடிவமைத்த பொருட்களை விற்பனை செய்தும், ரூ.70 ஆயிரம்
பங்களிப்பாக வழங்கினர்.மேலும், இப்பள்ளி சார்பில் முன்னாள் மாணவர்கள்
மற்றும் பிறருடன் இணைந்து, ரூ.9லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தத்
தொகையைக் கொண்டு பள்ளி வளாகத்தில் கழிப்பறைகள் கட்டுவது, சுவர்களுக்கு
வர்ணம் பூசுவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன்,
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து வகுப்பறை சுவர்
மற்றும் கரும்பலகைகளுக்கு வர்ணம் பூசுவதுடன், 22 அறைகளை துôய்மைப்படுத்தும்
பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இப்பள்ளிக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து
மேற்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர் என ஒசூர் டி.வி.எஸ். அகாதெமிமுதல்வர்
ஸ்ரீவித்யாமெளலி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...