ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு,
கோவில்பட்டியில், கடந்த, 5ம் தேதி துவங்கியது.மூன்று நாள் மாநாட்டில்,
பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். மாநில துணைத் தலைவர்
ஜோசப் ரோஸ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்து
சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், 'மத்திய
அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய பென்ஷன்
திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஊழலை ஒழிக்க, லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர
வேண்டும். மத்திய அரசு கல்வியை வணிக பொருளாக்கும் முயற்சியை கைவிட
வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...