ரஷ்ய
தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச மணற்சிற்ப போட்டி சென்ற 21-ந்தேதி துவங்கியது.
இதில் உலகம் முழுவதிலுமிருந்து 20-க்கும் மேற்பட்ட பிரபல மணற்சிற்ப
கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப
கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்று நாட்டிற்கு
பெருமை சேர்த்துள்ளார். 15 அடி உயரத்தில்
மகாத்மா காந்தியின் உருவத்தை மணற்சிற்பமாக அழகாக வடித்திருக்கிறார் சுதர்சன்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளார். இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
ஒடீசாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் அங்குள்ள பூரி கடற்கரையில் மணற்சிற்பக்கலை பயிற்சிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மகாத்மா காந்தியின் உருவத்தை மணற்சிற்பமாக அழகாக வடித்திருக்கிறார் சுதர்சன்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளார். இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
ஒடீசாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் அங்குள்ள பூரி கடற்கரையில் மணற்சிற்பக்கலை பயிற்சிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...