'எல் நினோ'க்கு அடுத்து 'லா நினா': விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
எல் நினோ' வெப்ப சலனத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 'லா நினா' எனும்
குளிர் சலனம் துவங்கும் எனவும், இது 'எல் நினோ'வை காட்டிலும் மிகப்பெரிய
பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த
ஆண்டு துவங்கிய 'எல் நினோ' காரணமாக இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு
குடிநீர் கிடைக்காத நிலை நிலவுகிறது. பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய
நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுகிறது.வியட்நாமில், கடந்த 100
ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப்
பஞ்சம் நிலவுகிறது. இந்நிலையில் 'எல் நினோ' தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும்,அதனைத் தொடர்ந்து வரும் 'லா நினா' காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள்எச்சரித்துள்ளனர். இந்த குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன ர்.
இதுகுறித்து ஐ.நா., துணைப் பொதுச் செயலர் ஸ்டீபன் ஓபிரையன்
கூறியதாவது: 'எல் நினா'வை தொடர்ந்து இந்த ஆண்டுஇறுதியில் வரவிருக்கும் 'லா
நினா' மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது 'எல் நினா'வால் ஏற்பட்ட
பாதிப்புகளைவிட மிகக் கடுமையாக இருக்கும். இதனால் ஏற்படும் வெள்ளப்
பெருக்கால், விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு அவர்
கூறினார்.
பஞ்சம் நிலவுகிறது. இந்நிலையில் 'எல் நினோ' தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும்,அதனைத் தொடர்ந்து வரும் 'லா நினா' காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள்எச்சரித்துள்ளனர். இந்த குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன ர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...