சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் டி.ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மே 1 முதல் மே 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.இந்த விடுமுறையில், 4 பகுதிகளாக விடுமுறைக் கால நீதிமன்றம் செயல்படும். வாரந்தோறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வழக்கு தாக்கல் செய்யலாம். புதன்,வியாழக்கிழமைகளில் உயர்நீதிமன்றம் செயல்படும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் பகுதி விடுமுறைக் காலநீதிபதிகளாக கே.கே.சசிதரன், எஸ்.விமலா, பி.கலையரசனும், 2-ஆவது பகுதி நீதிபதிகளாக என்.கிருபாகரன், எம்.வி.முரளிதரன், வி.பாரதிதாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, 3-ஆவது பகுதி நீதிபதிகளாக கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணகுமார், ஆர்.மகாதேவனும், 4-ஆவது பகுதி நீதிபதிகளாக எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை கிளையில்...:
விடுமுறை கால முதல் பகுதி நீதிபதிகளாக டி.எஸ்.சிவஞானம், பி.என்.பிரகாசும், 2-ஆவது பகுதி நீதிபதிகளாக ஜி.சொக்கலிங்கம், பி.கலையரசனும், 3-ஆவது பகுதி நீதிபதிகளாக எம்.வி.முரளிதரன், பி.கோகுல்தாசும், 4-ஆவது பகுதி நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...