ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் முன்னாள்
ராணுவத்தினருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வாதிடப்
போவதாக மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான ராம் ஜேத்மலானி
அறிவித்தார்.
தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில்
முன்னாள் ராணுவத்தினர் 320-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜந்தமர் மந்தருக்கு வெள்ளிக்கிழமை சென்று முன்னாள் ராணுவத்தினருக்கு தனது ஆதரவை ராம் ஜேத்மலானி தெரிவித்தார்.
அப்போது பேசுகையில், "எனக்கு தற்போது 93 வயதாகின்றது. எனவே எந்நேரமும் நான் இறக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் இருந்து உங்களுக்கு நான் நீதி பெற்றுத் தரும்வரை, அது நிகழாது என்று உறுதியளிக்கிறேன்' என்றார்.

ஜந்தர் மந்தர் பகுதியில் நடக்கும் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி சத்பீர் சிங் கூறுகையில், "3 முதல் 4 நாள்களில், உச்ச நீதிமன்றத்தில் ராம் ஜேத்மலானி வழக்கு தொடுக்கவுள்ளார். இதற்காக அவர் வழக்குரைஞர் கட்டணம் எதுவும் கேட்கவில்லை. இதேபோல், பாதுகாப்புப் படை தீர்ப்பாயத்திலும் 4 வழக்குகள் தொடுக்கப்படவுள்ளது' என்றார்.
அதைத் தொடர்ந்து, ராம் ஜேத்மலானி செய்தியாளர்களிடம் பேசியபோது பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடைந்த தோல்வியைப் போல, இனிவரும் தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்றும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
கருப்புப் பண விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ராம் ஜேத்மலானி வழக்கு தொடுத்து வாதாடி வருகிறார். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில்
முன்னாள் ராணுவத்தினர் 320-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜந்தமர் மந்தருக்கு வெள்ளிக்கிழமை சென்று முன்னாள் ராணுவத்தினருக்கு தனது ஆதரவை ராம் ஜேத்மலானி தெரிவித்தார்.
அப்போது பேசுகையில், "எனக்கு தற்போது 93 வயதாகின்றது. எனவே எந்நேரமும் நான் இறக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் இருந்து உங்களுக்கு நான் நீதி பெற்றுத் தரும்வரை, அது நிகழாது என்று உறுதியளிக்கிறேன்' என்றார்.

ஜந்தர் மந்தர் பகுதியில் நடக்கும் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி சத்பீர் சிங் கூறுகையில், "3 முதல் 4 நாள்களில், உச்ச நீதிமன்றத்தில் ராம் ஜேத்மலானி வழக்கு தொடுக்கவுள்ளார். இதற்காக அவர் வழக்குரைஞர் கட்டணம் எதுவும் கேட்கவில்லை. இதேபோல், பாதுகாப்புப் படை தீர்ப்பாயத்திலும் 4 வழக்குகள் தொடுக்கப்படவுள்ளது' என்றார்.
அதைத் தொடர்ந்து, ராம் ஜேத்மலானி செய்தியாளர்களிடம் பேசியபோது பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடைந்த தோல்வியைப் போல, இனிவரும் தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்றும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
கருப்புப் பண விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ராம் ஜேத்மலானி வழக்கு தொடுத்து வாதாடி வருகிறார். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...