TNPSC:நூலகர் பணி சான்றிதழ் சரிபார்க்க 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
நூலகர் மற்றும் உதவி நூலகர் பணிக்கு 29 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு
தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 மற்றும் 2–ந்தேதிகளில் எழுத்து
தேர்வை நடத்தியது.நேர்காணலுக்கு தற்காலிகமாக 65 விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த சான்றிதழ் விவரங்களை சரிபார்க்க தற்போது
அழைக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு மே 9
மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னையில் உள்ள
டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது. இவர்களுக்கான அழைப்பாணை
தபால் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும் இணைய தளத்திலும் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது.
அதில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் இந்த இரு நாட்களில்
பங்கேற்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு
அரசு தேர்வாணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...