அடுத்த ஆண்டு முதல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கும், தேசிய
அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சகம், முடிவு செய்துள்ளது.மேலாண்மை, பொறியியல், மருந்தியல் ஆகிய
கல்லுாரிகளுக்கு மட்டும், தேசிய அளவில், ரேங்க் எனப்படும் தரவரிசை
பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால், மருத்துவம் மற்றும்
சட்டக் கல்லுாரிகளுக்கு இந்த பட்டியல் வெளியிடப் படுவதில்லை.
இந்நிலையில்,
உயர் கல்வித் துறைக்கான செயலர் வி.எஸ்.ஓபராய் மற்றும் உயர் அதிகாரிகளுடன்,
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில்
ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து,
மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: சட்டம் மற்றும் மருத்துவக்
கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடுவது பற்றி
ஆலோசிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான, அளவுகோல்களை நிர்ணயிப்பது குறித்து, தேசிய சட்ட பல்கலைக்கழக துணை
வேந்தரிடமும், எய்ம்ஸ் மருத்துவ மனை இயக்குனரிடமும் ஆலோசனை
கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...