விவசாய கடன் தள்ளுபடிக்கு ஜெயலலிதா முதல் கையெழுத்து போட வேண்டுமென,
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதல்வராக, இன்று (23ம் தேதி)
பொறுப்பேற்க உள்ள, ஜெயலலிதாவுக்கு, தமிழக அனைத்துவிவசாயிகள் சங்கங்களின்
ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாண்டியன் அனுப்பியுள்ள
மனு:அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும், விவசாயிகள், பொதுமக்களுக்கு நேரடியாக குறித்த காலத்தில் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன் சிறு, குறு விவசாயிகள், பெருவிவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தாங்கள் பொறுப்பேற்று, முதல் கையெழுத்தாக கடன் தள்ளுபடி இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்கள் குழாய் பதிப்பதையும், ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய் எரிவாயு எடுக்கிறோம் என்கிற பெயரில் விளை நிலங்கள் பாழ்படுத்தப்படுவதையும், குடிநீர், நிலத்தடி நீர் பறிபோவதையும் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விளைநிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
மனு:அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும், விவசாயிகள், பொதுமக்களுக்கு நேரடியாக குறித்த காலத்தில் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன் சிறு, குறு விவசாயிகள், பெருவிவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தாங்கள் பொறுப்பேற்று, முதல் கையெழுத்தாக கடன் தள்ளுபடி இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்கள் குழாய் பதிப்பதையும், ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய் எரிவாயு எடுக்கிறோம் என்கிற பெயரில் விளை நிலங்கள் பாழ்படுத்தப்படுவதையும், குடிநீர், நிலத்தடி நீர் பறிபோவதையும் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விளைநிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...