தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட
ஜெயலலிதா, சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நேராக தலைமைச் செயலகம்
சென்றார். அங்கு தனது அலுவலகத்துக்குச் சென்று முக்கியக் கோப்புகளில்
கையெழுத்திட்டார்.
தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று
6வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சி சென்னை பல்கலை.
நூற்றாண்டு விழா அரங்கில் மிக எளிமையாக இனிதே நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், 28
அமைச்சர்களுக்கும், ஆளுநர் ரோசய்யா பதவியேற்பு பிரமாணமும், ரகசியக் காப்பு
உறுதி மொழியும் செய்து வைத்தார்.
விழா நிறைவு பெற்றதும், அங்கிருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று தனது அலுவல்களை உடனடியாகத் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
கடந்த ஆண்டு அவர் முதல்வராக இதே நாளில் பதவியேற்ற போது, அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அலுவல்களை தாமதமாகவே தொடங்கினார் ஜெயலலிதா.
ஆனால், இன்று பதவியேற்றதுமே தனது அலுவல் பணிகளை ஜெயலலிதா தொடங்கியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...