நாம் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க சில தகவல்கள்
தேநீர் குடிப்பதற்கு முன்பு இரண்டு பாதாம் ஆறு உலர் திராட்சை இரண்டு மிளகு சேர்த்து நன்றாக உமிழ் நீருடன் மென்று விழுங்குதல்.
தேநீர் குடிப்பது என்றால் ஒரு சிட்டிகை இஞ்சி சீவல் பொடியை பயன்படுத்துதல்.
காலை உணவை 7-9 மணிக்குள் உண்ணுதல்.
அரிசி தவிர்த்து சிறுதானிய உணவுகளை உண்ணுதல்.
அரைலிட்டர் தண்ணீர் குடித்தல்.
மதிய உணவினை 12-2 மணிக்குள் உண்ணுதல்.
ஒரு குழிக்கரண்டி சாதம் சாம்பார் அல்லது குழம்புடன்
ஒரு குழிக்கரண்டி சாதம் இரசத்துடன் ஒரு குழிக்கரண்டி மோருடன் என பிரித்து உண்ணுதல்.
காய்கறி கூடுதலாக எடுத்துக்கொள்ளுதல்.
அரைலிட்டர் தண்ணீர் குடித்தல்.
மாலை சிற்றுண்டியாக சிறிது (சுண்டல் , கடலை உருண்டை , பொரி, அவல், கேழ்வரகு அடை, வீட்டில் செய்த எண்ணெய் பலகாரம், பழவகைகள் ) இவற்றில் ஏதாவது ஒன்று சிறிதளவு.
தேநீர் சுக்கு தூள் ஒரு சிட்டிகை கலந்தது.
அல்லது சுக்கு மல்லி காபி பால் சேர்க்காமல்
அரை லிட்டர் தண்ணீர் குடித்தல்.
இரவு உணவு 7-9 மணிக்குள்
(இரசம் சாதம், பால் சாதம்,சப்பாத்தி,
சிறுதானிய கலவை தோசை,இடியாப்பம் )
இவற்றில் ஒன்று அரைவயிறு போதும்
வெதுவெதுப்பான சுடுநீர் அரை லிட்டர் குடித்தல்.
50அல்லது 100 மி.லி பாலுடன் கருப்பு பேரிச்சம்பழம் 2&3 சேர்த்து மென்று பால் அருந்துதல்.
இவ்வாறு உணவு முறையை பின்பற்றி வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
நோய் வரும் முன் காப்போம் உணவு கட்டுப்பாடுகளை.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...