தோப்புக்கரணம் போட்டாலே போதும்யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்கிடைத்துவிடும்.நமது முன்னோர்கள்வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்
பிடித்துக் கொள்கிறோம். காதுமடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள்இருக்கின்றன.காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
செயல்படுவதற்கான தூண்டுதல்கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டைஅளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும்.பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டுதோப்புக்கரணம் போட வேண்டும்.
வலது கைவிரல்களால் இடது காது மடல்களையும்,இடது கை விரல்களால் வலது காதுமடல்களையும் பிடித்துக் கொண்டுஉட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,
காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்குவேலை கொடுக்கிறோம். உடல் முழுக்கஇரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்தசோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும்
ரத்த ஓட்டம் சீராகும்.மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத்தொடர்ந்து செய்தால் வேறுஎந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.
தெ.இரவிச்சந்திரன்🙏
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...