மருத்துவம், இன்ஜி., கவுன்சிலிங்கில் மாற்றுத் திறனாளிஒதுக்கீட்டில்,
விளையாட்டு வீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின்சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களுக்கு தனி
ஒதுக்கீட்டில், மருத்துவம், இன்ஜி., மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஆனால்,
மாற்றுத் திறனாளிகளில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தனியாக ஒதுக்கீடு
பெறுவதில்லை.இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தடகள
பயிற்சியாளருமான ரஞ்சித்குமார் கூறும்போது, ''தேசிய போட்டிகளில் வெற்றி
பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு ரொக்கப்பரிசு வழங்குவதில்லை.
'பாராலிம்பிக்' சர்வதேச போட்டிகள் மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி
பெறுவோருக்கு அரசின் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது,'' என்றார்.தமிழ்நாடு
பாராலிம்பிக் சங்க மாநிலத் தலைவர் நாகராஜன் கூறும்போது, ''2015ல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான
தடகள போட்டியில், இந்தியாவிலிருந்து, 200 பேர் பங்கேற்று, 178 பதக்கங்களை
வென்றனர். தமிழகத்தின் சார்பில், எட்டு பேர் பங்கேற்று, 12 பதக்கங்களை
வென்றனர். இவர்களின் உடல்திறன் குறைவு தன்மைக்கேற்ப, வேலைவாய்ப்பிலும்,
உயர் கல்வியிலும், தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...