சுட்டி விகடனின் சிறந்த மாணவ பத்திரிக்கையாளர் தனலெட்சுமிக்கு பாராட்டு விழா:
சுட்டி விகடனின் மாணவர் பத்திரிக்கையாளாராக ஒரு ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட சீனியர் சுட்டி ஸ்டார்க்கு பள்ளியில் பாராட்டு ( தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இப்பள்ளியில் இருந்து சீனியர் சுட்டி ஸ்டாராக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது )தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு தேர்வான சுட்டி ஸ்டார் மாணவி தனலெட்சுமி ஒரு ஆண்டு முழுவதும் திறம்பட செயல்பட்டு பத்திரிக்கையில் எழுதியது காரணமாக அவருக்கு சிறந்த சுட்டி மாணவ பத்திரிக்கையாளர் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
சிறந்த பத்திரிக்கையாளராக தேர்வு செய்யப்பட்ட அவரை சென்னைக்கு அவரது தாயார் அழைத்து செல்ல இயலாத நிலையிலும் ( தாயார் வீட்டு வேலை பார்ப்பதால் ) ஆசிரியை செல்வமீனாள் அரசு விடுமுறை நாளன்றும் சென்னை அழைத்து சென்று சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சான்றிதழ்,விருது,பரிசு என அனைத்தும் கிடைக்க பெற்ற மாணவி தனலெட்சுமி மிகுந்த சந்தோசத்துடன் பள்ளி திரும்பினார்.சென்னையில் நடைபெற்ற விழாவில் முழுவதும் கலந்து கொண்டு பயன் பெற்றார்.மாணவிக்கு பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேவகோட்டை டிஸ்பி கருப்புசாமி,காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்,பாஸ்கரன் , தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.கடந்த ஆண்டும் இம்மாணவி தேர்வானதுடன் தாய் சென்னை செல்ல இயலாத நிலையில் ஆசிரியை செல்வமீனாள் அவர்கள்தான் சென்னை அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.சுட்டி விகடனின் மாணவர் பத்திரிக்கையாளாராக ஒரு ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட சீனியர் சுட்டி ஸ்டார்க்கு பள்ளியில் பாராட்டு ( தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இப்பள்ளியில் இருந்து சீனியர் சுட்டி ஸ்டாராக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது )தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு தேர்வான சுட்டி ஸ்டார் மாணவி தனலெட்சுமி ஒரு ஆண்டு முழுவதும் திறம்பட செயல்பட்டு பத்திரிக்கையில் எழுதியது காரணமாக அவருக்கு சிறந்த சுட்டி மாணவ பத்திரிக்கையாளர் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
பின் குறிப்பு : கடந்த ஆண்டு தேர்வு பெற்ற சுட்டி ஸ்டார் மாணவர் நடராஜனும் இதே போன்று சீனியர் சுட்டி ஸ்டாராக தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...