தமிழக சிறைகளில், 104 உதவி ஜெயிலர் பதவிக்கான தேர்வில், 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகள், மாவட்ட சிறைகளில், உதவி ஜெயிலர் பதவியில், 104 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வை அறிவித்தது.
இதற்கு, 20 ஆயிரத்து, 791 பேர் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு நேற்று, தமிழகம் முழுவதும், 75 மையங்களில் நடந்தது. இதில், 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர். காலை மற்றும் பிற்பகலில் இரண்டு தாள்களாக தேர்வு நடந்தது.மனித உரிமைகள் குறித்த அரசியல் சட்டம், மாநில, மத்திய அரசின் நிர்வாகம், சமூக, பொருளாதார இந்திய பிரச்னைகள், தேசிய மற்றும் மாநில அளவில் நடப்பு பிரச்னைகள் குறித்த பாடங்களிலிருந்து, காலையில் நடந்த தேர்வில் கேள்விகள் இடம் பெற்றன. பொது படிப்புகள், திறனறித் தேர்வு, பொது தமிழ் மற்றும் ஆங்கில தேர்வு ஆகிய பாடங்களுக்கு, கொள்குறி வகை (அப்ஜெக்டிவ்) தேர்வு, பிற்பகலில் நடந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...