சிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதிகாரம்: மத்திய அரசு திட்டம்!! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 27 September 2016

சிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதிகாரம்: மத்திய அரசு திட்டம்!!

சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தால், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஓஸன்நெட் எனும் புதிய இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
மாதா அமிர்தானந்த மயியின் 63-ஆவது பிறந்ததினத்தையொட்டி, ஓஸன்நெட் இணையதள வசதி திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கலந்து கொண்டு, அதைத் தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
புதியனவற்றை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். நாடு முழுவதும் புதியனவற்றை கண்டுபிடிக்கும் மையங்களை உருவாக்குவது பிரதமர் நரேந்திர மோடியின் இலட்சியம் ஆகும்.
சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுடன், அவற்றுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தும். அதேநேரத்தில், சரிவர செயல்படாத பல்கலைக்கழகங்களுக்கு தீவிர கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்கும். எனினும், அந்தப் பல்கலைக்கழகங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.
புதியன கண்டுபிடிக்கப்படும்போதுதான், ஒரு நாடால் வளர்ச்சியடைய முடியும். எனவே, புதியனவற்றை கண்டுபிடிப்பதில் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் ஆகியவை இணைந்து செயல்படுவது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு விரைவில் வெளியிடவுள்ளது.
ஓஸன் நெட் போன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு தரவேண்டியது எனது கடமை மற்றும் பொறுப்பாகும். இந்த தகவல்தொடர்பு வசதியால், கடலில் மீனவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.
நமது கடல்பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுப்பதற்கு கடலோரப் பாதுகாப்புப் படைக்கும் இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.
நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வியில் அரசியலை புகுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
இதுவொரு தேசிய நலன்சார்ந்த திட்டம் ஆகும். இதில், இடது அல்லது வலது சிந்தனை என்று எதுவும் கிடையாது என்றார் ஜாவடேகர்.
நிகழ்ச்சியில் ஓஸன்நெட் வசதியின் மூலம், அரபிக் கடலில் 60 கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவருடனும் ஜாவடேகர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டி, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H