இடைத்தேர்தலை முன்னிட்டு, ஊழியர் நியமன நேர்முகத் தேர்வை, மின் வாரியம்
ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து,தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்திக்
குறிப்பு:
காலி பணியிடமாக உள்ள,25 சுருக்கெழுத்து தட்டச்சர்,
25 இளநிலை தணிக்கையாளர்,50 உதவி வரைவாளர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு,
நவ., 2, 4, 5, 7ம் தேதிகளில் நடக்கும் என, இணையதளம் மூலம்
தெரிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலுக்கான நடத்தை விதி அமலில் உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட
நேர்முகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. புதிய தேதி, 19ம் தேதிக்கு
பின் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.மூன்று
தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம், கடந்த, 17ல்
அறிவித்தது. அன்று முதல், மூன்று மாவட்டங்களிலும் நடத்தை விதி அமலுக்கு
வந்தது. ஆனால், மின் வாரியம், நேர்முகத் தேர்வு அறிவிப்பை, நேற்று
முன்தினம் தான் வெளியிட்டது. திடீரென தேர்தலை காரணம் காட்டி, நேற்று தேர்வை
ஒத்திவைத்து உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...