அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில்
வருகின்ற தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை
அறிவித்து வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை
மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில்
புதன் கிழமையன்று
ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க
மாவட்டத் தலைவர் கே.ஜெயபாலன்
தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர்
சி.கோவிந்தசாமி, பொருளாளர் கே.நாகராஜன் மற்றும்
நிர்வாகிகள் கு.சத்தி, மலர்விழி,
ரெங்கசாமி, மு.முத்தையா, ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளிக்கு
முன்பாக அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். சிபிஎஸ்
திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். முதல்வர் அறிவித்தபடி மகப்பேறு விடுப்பை 9 மாதமாக அமுல்படுத்த வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள்எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...