ஜனவரி 1ம் தேதி
முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டை
அவசியமாகிறது. 2017 ஜூன்
30ம் தேதிக்குள் ஆதார் வழி
பரிவர்த்தனைக்கு
ஏற்பாடு செய்ய கால அவகாசம்
தரப்பட்டுள்ளதாக ரிசர்வ்
வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழி
பண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமே
பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் பரிவர்த்தனைக்கு
எலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசிய
எண், பயோ மெட்ரிக் அடையாளம்
ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதி
செய்யும் கருவிகளை வைத்து இருக்கவும்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் வழி பணப் பரிவர்த்தனையை
எப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர்
அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...