புதிய புயல் சின்னம்! : சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர், ஸ்டெல்லா
கூறியதாவது: வங்கக் கடலின் கிழக்கு பகுதியில், அந்தமான் அருகே, காற்றழுத்த
தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக, இன்று மாற
வாய்ப்பு உள்ளது.
அதைத் தொடர்ந்து, 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இதனால், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு எதுவும் இல்லை. இவ்வாறு அவர்
கூறினார். அதே நேரத்தில், அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை
வலுவடைந்து, மத்திய வங்கக் கடல் பகுதியில், புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக,
தனியார் வானிலை கணிப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்தப்
புயல் உருவானாலும், விசாகப்பட்டினத்தை நோக்கியே நகரும் என்பதால்,
தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு மட்டுமே, மழை கிடைக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...