வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர் தமிழக அரசின் இ -சேவை
மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம்
வியாழக்கிழமைவெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் குறைந்த தாழ்வு அழுத்த
(வீடுகளின் பயன்பாட்டுக்கான) புதிய மின் இணைப்பு, கூடுதல் மின்பளு அல்லது
மின்பளு குறைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம்
பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.மேலும், உயர் அழுத்த புதிய மின்
இணைப்புகள், கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்பு ஆகிய சேவைகளைப்
பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இந்தச் சேவை அண்மையில்
விரிவுபடுத்தப்பட்டது.இந்த நிலையில், வீடுகளின்
பயன்பாட்டுக்கான குறைந்த தாழ்வு அழுத்த புதிய மின் இணைப்பு பெற
விரும்புவோர், தமிழக அரசின் இ -சேவை மையங்கள் மூலமாகவும்
விண்ணப்பிக்கலாம்.ஏற்கெனவே உள்ளது போன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும்
புதிய இணைப்புகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...