- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 21 January 2017

Jallikattu 🐂:பயமும் இல்லை; பணியிழந்தாலும் கவலையில்லை..! ஜல்லிக்கட்டை ஆதரித்து கலக்கிய காவலர்


தலை வணங்குவோம் இந்த காவலர்காக -னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆயுதப்படை காவலர் உணர்ச்சிகரமாகப் பேசினார். அப்போது, "பயமும் இல்லை.
பணியிழந்தாலும் கவலையும் இல்லை' என்று அவர் பேசியது போராட்டத்தில் பங்கேற்றோருக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. இதனால், அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாய அழகு, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4 நாள்களாக கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை உணர்ச்சி வேகத்துடன் காணப்பட்ட அவர், விவேகானந்தர் இல்லம் எதிரே போராட்டம் நடைபெறும் மேடை அருகே வந்தார். அங்கு இருந்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் தனது ஆதரவைத் தெரிவித்தார். பின்னர், அவர் பேசியது:-
இந்த மண்ணில்தான் காந்தியும், நேதாஜியும் பிறந்தனர். காந்தி பிறந்த மண் என வாக்கு கேட்பவர்கள், காந்திய வழியில் போராடும் மக்களின் பிரச்னைகளை கேட்க வரமாட்டீர்களா?. காவலராக இருப்பதால் இன்னும் வெளிப்படையாக பேச முடியவில்லை. காவலர்களுக்கும் தமிழன் என்ற உணர்வு உள்ளது.
குழந்தைகள் தாய் பால் கூட குடிக்காமல் இருக்கலாம், ஆனால் பசும்பால் குடிக்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட பசுவை அழிய விடக் கூடாது.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், செயற்கை உரம் போட்டு மண்ணை சாகடித்துவிட்டோம். இனக்கலப்பு செய்து மாட்டு இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து கலாசாரத்தை அழிக்க பார்க்கிறார்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். இந்தப் போராட்டத்தில் பேசியதால், எந்தப் பயமும் இல்லை. வேலையில் இருந்து காவல்துறை நீக்கினாலும் பரவாயில்லை.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என்றார்.


காவலருக்கு குவிந்த வாழ்த்துகள்: சீருடையிலே காவலர் மாய அழகு பேசுவதை பார்த்த உயர் அதிகாரிகள் மேடையை நோக்கி வேகமாக வந்தனர். ஆனால், அவரது பேச்சு போராட்டத்தில் ஈடுபட்டோரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது. மேலும், மேடையை விட்டு இறங்க முயற்சித்த அவரை, இளைஞர்கள் தங்களது தோள்களில் தூக்கி வைத்து ஆர்ப்பரித்தனர். மேலும், கரகோஷம் எழுப்பினர்.
மற்றொரு காவலரும் ஆதரவு: இதேபோல், அண்ணா சதுக்கம் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த காவலர் விஜயகுமாரும் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.
அதிகாரிகள் விசாரணை: இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் இரு காவலர்களிடமும் விசாரணை செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H